கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியாக இருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்துவருகிறது. கொரோனா பரிசோதனை விகிதமும், குணமடைவோர் விகிதமும் இந்தியா அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதிலிருந்து, தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்திறன் புலப்படுகிறது.

வருமுன் அறிதல்:

* வெளி மாநிலம் (அ) வெளி நாட்டிலிருந்து தமிழகத்திற்குள் வரும் யாவரும், எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதிருக்கும் நிலையில் மட்டுமே, நுழைவு அனுமதி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

*சென்னையில் 3-7 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று மக்கள் உடல்நிலையை பரிசோதிக்கின்றனர்.

தீவிர பரிசோதனை:

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 11 கோடி மக்கள் தொகை கொண்ட மஹாராஷ்டிரா, 2.7 மில்லியன் பரிசோதனைகளை மட்டுமே செய்திருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் 3.2 மில்லியன் பரிசோதனைகளைச் செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல்:

* தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதன் மூலம், தொற்று பரவும் வேகத்தை தமிழக அரசு வெகுவாகக் குறைத்துள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்:

* IVRS தொழில்நட்பத்தின் மூலம், பொதுமக்கள் கோவிட் உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும். தமிழக அரசின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

* லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க, Tamil Nadu e-Governance Agency (TNeGA) வர்த்தகத்திற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

தி சென்னை மாடல்:

* சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 87.5 ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் மிகச்சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

* முதலில் 1,000 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னையில் இருந்தன. தற்போது அவை, 24 ஆக குறைந்துள்ளன.

மேலும்,

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான RT-PCR மையங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 135 கோவிட் பரிசோதனை மையங்கள் (61-அரசு, 74-தனியார்) இருக்கின்றன.

* e-sanjeevani tele-consultation sessions-இல் தேசிய அளவில் தமிழகம் தான் முதலிடம்.

* கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.4 ஆக இருப்பதன் மூலம், தமிழகம் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.

* தமிழகத்தில் தான் அதிக அளவிலான அரசு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுவருகின்றனர்.

* தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகள் - (1,29,122), வெண்டிலேட்டர் - 2,882  அரசு மருத்துவமனைகளில் உள்ளன.

* பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்