‘8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

WEATHER, RAIN, ALERT, DISTRICTS, LIST, IMD, CHENNAI, HEAVYRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்