நாட்டையே 'அதிர' வைத்த 'கர்ப்பிணி' யானை மரணம்... 'மதவெறியன்' தான் 'கொல' பண்ணிருப்பான்... 'பரபரப்பை' ஏற்படுத்திய 'ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி யானை ஒன்று பட்டாசை மறைத்து வைத்த அன்னாசிப்பழத்தை உண்ட போது பட்டாசு வெடித்து சிதறியது.

Advertising
Advertising

இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சையளித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது. யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த கொடிய சம்பவத்திற்கு பலர் தங்களது ஆதங்கத்தினையும், வருத்தத்தினையும் தெரிவித்துள்ளனர். இந்த கொடிய செயல் குறித்து நிச்சயம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடும் நடவடிக்கை ஏற்படும் என தெரிவித்திருந்தார்.

யானையின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, யானையின் மரணத்திற்கு மதவெறியன் ஒருவன் தான் காரணம் என ட்வீட் செய்துள்ளார். எச். ராஜாவின் பதிவில், 'கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம்' என தெரிவித்துள்ளார்.

மதவெறியனால் கொல்லப்பட்டது என எச். ராஜா குறிப்பிட்டுள்ள நிலையில் நெட்டிசன்களிடையே இது மிகப்பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்