தாலிகட்டும் நேரத்துல மாயமான மாப்பிள்ளை.. பெண்வீட்டார் எடுத்த அதிரடி முடிவு.. கடலூரில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் அருகே திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு மணமகன் மாயமானதால் திருமண வீடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த சம்பவம் கடலூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | எலும்பு முறிவு.. ஒரே கையில் பேட்டிங்.. கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரி.. குவியும் பாராட்டுகள்.. வீடியோ..!

கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இரு விட்டாரின் சம்மதப்படி கடந்த ஒன்றாம் தேதி கமலீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனை அடுத்து இரு தரப்பு வீட்டினரும் தடபுடலாக கல்யாண ஏற்பாடுகளை செய்து வந்திருக்கின்றனர்.

திருமணத்திற்கு முந்தய தினம் வரவேற்பு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். அப்போது மணமக்கள் இருவரும் ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து மண்டபத்தை அடைந்த இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சென்றனர். அதன் பின்னர் இருவரும் போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners.

அடுத்தநாள் திருமண ஏற்பாடுகளில் மண்டபமே பரபரப்புடன் இருந்திருக்கிறது. அப்போது, மாப்பிள்ளை அறையில் மணமகன் இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். மண்டபம் முழுவதும் தேடியும் மணமகனை கண்டுபிடிக்க முடியாததால் குழப்பமடைந்த உறவினர்கள் அந்த இளைஞருக்கு போன் செய்திருக்கின்றனர். அப்போது, அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பெண் வீட்டார் குழம்பிப்போயிருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, உறவுக்கார இளைஞர் ஒருவரிடம் மணப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி உறவினர்கள் பேசி இருக்கின்றனர். அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்த நிலையில் அவருக்கும் அந்த இளம்பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து திருமணம் செய்துகொள்வதாக கூறி, முகூர்த்தத்திற்கு சற்று நேரத்துக்கு முன்னர் தலைமறைவான இளைஞர் மீது காவல்துறையில் பெண் வீட்டார் புகாரும் அளித்திருக்கின்றனர். அப்போது கல்யாணத்துக்கு ஏற்பட்ட செலவை பெண்வீட்டார் அந்த இளைஞரின் வீட்டினரிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!

CUDDALORE, GROOM, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்