உறவினரை கல்யாணம் செய்ய மறுத்த மகள்... ஆசை வார்த்தையால்... தாய் செய்த அதிர்ச்சி காரியம்... மாணவிக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 10-ம் வகுப்பு மாணவியை, தாயே துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர்களது வீட்டிற்கு வந்திருந்த உறவினரான தினேஷ் ரூபன் என்பவர், மாணவியை திருமணம் செய்து கொள்ள, மாணவியின் பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், அவரது தந்தையும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாணவியின் தாயாரிடம், இளைஞர் தினேஷ் ரூபன் ஆசை வார்த்தை கூறி, மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டு வந்துள்ளார். இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் முடிவில் தந்தை, மகள் உறுதியாக இருந்தனர். அதன்பின்னர் மாணவியின் தாய், தனது மகளை தினேஷ் ரூபன் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, மாணவியின் கை கால்களில் சூடு வைத்து தாய் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர் துன்புறுத்தலால் மாணவி கதறித் துடித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, சேலம் மாநகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்திய தாயையும், இளைஞர் தினேஷ் ரூபனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

REFUSE, MARRY, STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்