"கல்யாணத்துக்கு வந்தவங்க பார்வை பூரா பேனர் மேல தான்".. நண்பர்கள் செஞ்ச அட்ராசிட்டி.. "மணமகன் எடத்துல ஒரு வார்த்தையை Use பண்ணாங்க பாருங்க"

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம்.

Advertising
>
Advertising

Also Read | அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!

ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.

யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திருமண மேடையில், நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும்.

அந்த வகையில்., நண்பரின் திருமணத்திற்காக இளைஞர்கள் சேர்ந்து வைக்கும் வரவேற்பு பேனருக்கு முக்கிய பங்குண்டு. ஒரு காலத்தில் பாடல் வரிகளை பயன்படுத்தி, திருமண ஜோடிக்கு வாழ்த்து கூறி வந்த நண்பர்கள், இன்று வித விதமாக யோசித்து செய்தித் தாள் வடிவிலும், பல காமெடி வசனங்களுடன் கூடி திருமண பேனர் வைக்கின்றனர்.

அப்படி ஒரு பேனர் தான், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி பலரது கவனம் ஈர்த்து வருகிறது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பகுதியில் சமீபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. பூபதி ராஜா மற்றும் ரேணுகா ஆகிய இருவரும் இடையே காதல் உருவாகி இருந்த நிலையில், சமீபத்தில் இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்காக நண்பர்கள் வைத்த பேனர் தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம், அந்த பேனரில் மணமக்கள் புகைப்படம் ஒரு பக்கம் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் கீழ் மணமகன் என் இருக்க வேண்டிய இடத்தில், 'கைதானவர்' என பூபதி ராஜா பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் கீழ் 'கைது செய்தவர்' என மணப்பெண் 'ரேணுகா' பெயரை நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல, வாலிபர் கைது என பெரிதாக செய்தித்தாளில் வரும் தலைப்பு போல ஒரு பக்கம் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் கீழ் குற்றம் என்ன என்பது பற்றிய இடத்தில், பெண்ணின் மனதை திருடி விட்டார் என அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்புக்கு மூன்று முடிச்சு போடுதல் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யும் நாள் என திருமண நாளை குறிப்பிட்ட நண்பர்கள், சாட்சிகள் என்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அச்சிட்டுள்ளனர்.

இவை அனைத்தையும் விட இந்த திருமண பேனர்களில் ஹைலைட் ஆக பார்க்கப்படும் விஷயம் என்னவென்றால், கீழே நண்பர்கள் 4 பேரின் புகைப்படங்கள் இருக்க அதற்கு மேலே "கல்யாணத்துக்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க" என்ற வரி இடம் பெற்றுள்ளது.

நண்பரின் திருமணத்திற்கு பேனர் வைத்ததுடன் மட்டுமில்லாமல் அடுத்து தங்களின் திருமணத்திற்கு வரன் தேடுவது பற்றியும் வேடிக்கையாக அதில் குறிப்பிட்டுள்ள விஷயம் பலரது மத்தியில் லைக்குகளையும் அள்ளி வருகிறது.

Also Read | இரண்டாவது மனைவி பெட்ரூமுக்குள் நுழைந்த பாம்பு.. "முதல் மனைவி கூட மீண்டும் வாழ கணவர் போட்ட திடுக்கிடும் பிளான்?"

FRIENDS, BANNER, WEDDING BANNER, MARRIAGE CREATIVE BANNER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்