அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதனால் அவரை கைது செய்ய தமிழக போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.

மேலும் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக போலீசார் இன்று (05.01.2022) கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RAJENDRABALAJI, ARRESTED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்