‘பேஸ்புக் மூலம் காதல்’.. கனடா பெண்ணுக்கும் இந்திய பையனுக்கு கொடைக்கானலில் நடந்த கல்யாணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேஸ்புக் மூலம் பழகி கனடா நாட்டை சேர்ந்த பெண்ணை இந்திய இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் கொடைக்கானலில் நிகழ்ந்துள்ளது.

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்பின் (24). சிறுகதை எழுத்தாளரான இவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் கொடைக்கானல் அண்ணா நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. அதில் மாப்பிள்ளை வேஷ்டி சட்டையும், மணப்பெண் பட்டுச் சேலையும் அணிந்திருந்தனர். இந்த திருமணத்துக்கு அப்பகுதி மக்கள் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

FACEBOOK, CANADA, MARRIED, LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்