2-வது கல்யாணத்துக்கு ரெடியான ‘அப்பா’.. தடுத்த மகனுக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தந்தையின் இரண்டாவது திருமணத்தை தடுத்த மகனை அவரது தந்தை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் தரியபூர் பகுதியை சேர்ந்தவர் நயிமுதின் ஷேக் (50). இவரது மகன் யாஹ்யா ஷேக். இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன் யாஹ்யா ஷேக்கும், அவரது தாயார் ஜுபேதாபானுவுன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நயிமுதின் ஷேக் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மகன் யாஹ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நயிமுதின் மகனை கடுமையாக தாக்கியுள்ளார். மகனை தாக்கும்போது தடுக்க வந்த தாய் ஜுபேதாபானைவையும் நயிமுதின் ஷேக் தாக்க முயன்றுள்ளார். இதனால் தந்தை மீது மகன் யாஹ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்