14 வயசுல 'கல்யாணம்' பண்ணி வெச்சா வாழ்க்க சிறப்பா இருக்கும்... 'ஜோசியர்' பேச்சைக் கேட்டு சிறுமிக்கு திருமணம்... இப்போ பொண்ணு 'கர்ப்பமா' வேற இருக்கா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ரத்னேஷ்வரன். 27 வயதான இவருக்கும், இவரின் தாய் மாமன் மகளான 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர சட்ட விரோதமாக சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மணமக்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சிறுமி என தெரிந்தும் திருமணம் செய்து கொண்ட ரத்னேஷ்வரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப ஜோசியர் ஒருவர் 27 வயதில் ரத்னேஷ்வரனுக்கு திருமணம் நடத்தி வைத்தால் இருவரது வாழ்க்கையும் நலமாக இருக்கும் என கூறி அவர்களின் திருமணத்திற்கும் நாள் குறித்து கொடுத்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் வைத்து திருமணம் நடத்திய நிலையில் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் மூன்றாம் மாதம் கழித்து நடந்த தாலி பெருக்கு நிகழ்ச்சி காரணமாக சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியானது.

ஜோதிடர் பேச்சைக் கேட்டு 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்