அந்த 'படத்தை' 30 தடவைக்கு மேல பார்த்தேன்... இளம்பெண்களிடம் பணம், நகை மோசடி... 'சிக்கிய' இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம்பெண்களிடம் பணம், நகை மோசடி செய்து ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபகாலமாக இளம்பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஏராளமான இளம்பெண்கள் இளைஞர் ஒருவரிடம் ஏமாந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா (36). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து 5½ லட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை வாங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் ராகேஷ் சர்மா மீது அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் கூற அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தெரியாமல் ராகேஷ் சர்மா மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து 2000 ஆயிரம் ரூபாய் பணம் கேட்க அவர் போலீசார் அறிவுரைப்படி மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி கூறியிருக்கிறார்.

அதன்படி ராகேஷ் சர்மா வர போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். திருமணமாகி மனைவி பிரிந்து சென்றதை அடுத்து கத்தாரில் வேலை பார்த்துள்ளார். அப்போது நான் அவன் இல்லை படத்தை 30 முறைக்கு மேல் பார்த்து அதன்படி சமூக வலைதளங்கள் வழியாக இளம்பெண்களை ஏமாற்ற ஆரம்பித்து இருக்கிறார்.

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த பெண்களையும் ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்