திடீரென வீட்டுக்கு வந்த யானை!... பீதியில் மக்கள் ஓடிய போதும்... 'தன்னந்தனியாக' கணவன் சடலத்தை 'மடியில் வைத்து'.... கதறி அழுத 'மனைவி'!... கிராமத்தை உலுக்கிய கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அம்மாபேட்டை அருகே நள்ளிரவில் மனைவி எதிரே விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாபேட்டை அருகேயுள்ள கோணபுளியந்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் என்கிற பொன்னுசாமி (46). விவசாயி. இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு சுஜீத் என்ற 7 வயது மகன் உள்ளார்.

இவர், தன் குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி, 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவில் பக்கத்து தோட்டத்தில் யானை ஒன்று புகுந்துள்ளது. இதனால், சத்தம் கேட்டு உடனே பொன்னுசாமி எழுந்து, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது, திடீரென அங்குவந்த யானை பொன்னுசாமியை கீழே தள்ளி நெஞ்சு பகுதியில் மிதித்ததில் அவர் துடிதுடித்து மனைவியின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா தனது கணவனின் உடலை தனது மடியில் வைத்து அழுது கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அங்கு யானை வந்தது.

அதைப் பார்த்த மற்றவர்கள் ஓடிவிடவே, ஐஸ்வர்யா தனது கணவரின் உடலை தனது மடியில் வைத்து தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது பொன்னுசாமியின் கால் பகுதியை தனது தும்பிக்கையால் தட்டிப்பார்த்துவிட்டு, ஐஸ்வர்யாவை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டது.

இந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பொன்னுசாமியின் உடலைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

FARMER, ELEPHANT, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்