திருப்பூரில் திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.. உடனே உரிமையாளர் செஞ்ச காரியம்.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

“அப்படியே என்ன பார்க்கிற மாதிரி இருக்கு.. இந்தியாவுக்காக 100 டெஸ்ட் விளையாடுவார்”.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய பாண்டிங்..!

திருப்பூர் மாவட்டம், புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் பைக்கில் நபர் ஒருவர் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பைக்கில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக அந்த நபர் பைக்கை சாலையோரமாக நிறுத்தினார்.

பைக்கில் பேட்டரியில் இருந்து புகை வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், லாவகமாக செயல்பட்டு பேட்டரியை அகற்றினார். ஆனாலும் பேட்டரியில் இருந்து புகை வெளியேறிக் கொண்டே இருந்தது. இதனால் அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பேட்டரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

கடந்த மாதம் வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியதில் துரைவர்மா அவரது மகள் பிரீத்தி ஆகியோர் உயிரிழந்தனர். அதற்கு மறுநாளே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் இதேபோல் எலக்ட்ரிக் பைக் பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாதவரம், திருச்சி மணப்பாறை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து எலக்ட்ரிக் பைக் பற்றி எரிந்தது.

தமிழகத்தில் அடுத்தடுத்து எலக்ட்ரிக் பைக்குகள் வெடிப்பது, தீ பிடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் எலக்ட்ரிக் பைக் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் முன்பு அதன் செயல்பாடுகள், பாரமரிப்பு உள்ளிட்ட தகவல்களை முறையாக அறிந்து கொள்ள வேண்டும் என பொறியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

“எங்க வைரத்தை திருப்பி கொடுங்க”.. ஐபிஎல் மேட்சுக்கு நடுவே முன்னாள் இங்கிலாந்து வீரரிடம் கவாஸ்கர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!

ELECTRIC BIKE, ELECTRIC BIKE BATTERY EXPLODES, TIRUPUR, எலக்ட்ரிக் பைக், திருப்பூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்