‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் முகமூடி கும்பலிடமிருந்து எஜமானரைக் காப்பாற்றப் போராடிய நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமாரைத் தாக்குவதற்காக அசோக் தன்னுடைய நண்பர்கள் சிலரை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

அசோக் அனுப்பி வைத்தவர்கள் முகமூடியுடன் சென்று செந்தில் பணிபுரியும் இடத்தில் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செந்திலையும், அவரது மனைவியையும் அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைத் தடுப்பதற்காக செந்தில் வளர்த்து வந்த நாய் அவர்களை நோக்கி சத்தமாகக் குரைத்ததுடன் அவர்களைக் கடிக்கவும் முயன்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நாயை அங்கேயே வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எஜமானரைக் காப்பாற்றுவதற்காக போராடிய நாய் முகமூடி கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MADURAI, PET, DOG, BRUTAL, MURDER, SAVES, MASTER, SHOCKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்