எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

Advertising
>
Advertising

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு இரண்டாவது வெற்றி.. குஷியில் விஜய் ரசிகர்கள்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தபால் ஓட்டுகள்

வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.

அதிமுக கோட்டையை சரித்தது திமுக

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக வென்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 சட்டசபை தொகுதியிலும் திமுக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியில் திமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் பகுதியின் எம்.எல் ஏவாக இருப்பவர் அதிமுகவின் எஸ்பி வேலுமணி. கோவை முழுவதிலும் அதிமுக ஆதிக்கம் செலுத்தியதற்கு இவர் முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

பாலாஜியின் ஆப்பரேஷன்

எஸ்பி வேலுமணியின் கோட்டையாக திகழும் கோவை வட்டாரத்தில் திமுக வை வெற்றிபெற வைக்க திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் பலனாக தற்போது தொண்டாமுத்தூரை திமுக கைப்பற்றி இருப்பது செந்தில் பாலாஜியின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றி இருக்கிறது. அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தோல்வி.. நெஞ்சு வலியால் சரிந்த திமுகவேட்பாளர்..ஆண்டிப்பட்டியில் பரபரப்பு..!

TAMILNADU ELECTION RESULTS, DMK, THONDAMUTHUR, DMK REGISTERED VICTORY, திமுக, செந்தில் பாலாஜி, எஸ்பி வேலுமணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்