துப்புரவு தொழிலாளரை தாக்கிய ‘திமுக’ பிரமுகர்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் துப்புரவு தொழிலாளரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அலுவலத்தில் லோகநாதன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் புகழேந்தி, 82-வது வட்டத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டுமென மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள், துப்புரவு பணியாளர் லோகநாதனை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து ராயபுரம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக லோகநாதன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தந்தி டிவி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவத்தில், உணவுப் பொருள்களை திமுக உறுப்பினர்கள் சிலர் சேதப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் துப்புரவு பணியாளரை திமுக வட்டச் செயலாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்