"எப்படி இருக்கிறார் கேப்டன்?"... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில்,  கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்