கேப்டன் ‘விஜயகாந்த்’ மருத்துவமனையில் அனுமதி.. தேமுதிக முக்கிய அறிக்கை வெளியீடு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக கட்சி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இதனை அடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இதனால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சில இடங்களில் மட்டுமே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனிடையே இன்று அதிகாலை 3 மணியளவில் விஜகாந்த்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பும், இதேபோல் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்த் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்