Watch: கேப்டனுக்கு என்ன ஆச்சு..? ‘மீண்டும்’ மருத்துவமனையில் அனுமதி.. விஜய் பிரபாகரன் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கமான சோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் விளக்கமளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்