அயோத்தி படத்திற்காக அதிகரிக்கப்பட்ட திரையரங்குகள்.. இத்தனை தியேட்டர்களா! இயக்குனர் மந்திர மூர்த்தி EXCLUSIVE!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

[10:42 pm, 09/03/2023] நவில் ஆதிசிவலிங்கம் MPM: இயக்குனர் வெற்றிமாறன்,  நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றில் சூதாடி படம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்…
[11:51 pm, 09/03/2023] நவில் ஆதிசிவலிங்கம் MPM: அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி, நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'அயோத்தி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் சசிகுமார் சில நாட்களுக்கு முன் அளித்துள்ளார். அதில், அயோத்தி படம் குறித்து பேசிய சசிகுமார், "அயோத்தி படம் முதல் நாளில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் யாருமே இல்லை. உண்மையை சொனனா இதான். இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.  படத்திற்கு ப்ரோமோஷன் இல்லை.  நம்ம மார்க்கெட் நமக்கு தெரியும்ல. திடீரென வந்த போது, மக்கள் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. மக்களே சிலர் டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தினை பார்க்க சொல்கிறார்கள்." என சசிகுமார் பேசியிருந்தார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை இயக்குனர் மந்திர மூர்த்தி அளித்துள்ளார். மேலும் அயோத்தி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து பதில் அளித்த மந்திரமூர்த்தி, "சனி & ஞாயிறு அன்று படம் நல்லா இருக்கு. மக்கள் தியேட்டருக்கு வரவில்லை என்று தகவல்கள் வந்தன. திங்கள் கிழமை முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகள் அதிகமாகி உள்ளது என தயாரிப்பாளர் கூறினார். அது போல சில திரைப்படங்களில் பெரிய ஸ்கிரீன் மற்றும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது." என மந்திர மூர்த்தி பதில் அளித்துள்ளார்.

SASIKUMAR, AYODHI

மற்ற செய்திகள்