"MGR பொன்னியின் செல்வன் படத்தை என்னை டைரக்ட் பண்ண சொன்னாரு.. ஆனா".. பாரதிராஜா உடைத்த சீக்ரட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா இந்த படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Advertising
>
Advertising

                    Images are subject to © copyright to their respective owners.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பாரதிராஜா," பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிக்க விரும்புவதாகவும், கமல்ஹாசனை வந்தியத்தேவனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் வைத்து படத்தை இயக்குமாறு எம்.ஜி.ஆர் கூறினார். ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. நான் கண்டிப்பாக தவறு செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். மணிரத்னம் ஒரு அற்புதமான தழுவலை உருவாக்கியிருப்பதை கண்டு வியப்படைகிறேன். எழுத்தாளர் கல்கி தனது புத்தகத்தில் நந்தினி கதாபாத்திரத்தை முழுமையடையாமல் விட்டுவிட்டார். மணிரத்னம் அவருடைய அடுத்த படைப்புகளில் அதனை முழுமை பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

PONNIYIN SELVAN, BHARATHIRAJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்