‘அப்போ விஜய்.. இப்போ தனுஷ்’!.. சர்ச்சையாகும் சொகுசு கார் வரி விலக்கு விவகாரம்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷும் இறக்குமதி காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அபராதத்தை தள்ளுப்படி செய்யக்கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி கடந்த 2015-ம்  ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. அதனால், வழக்கு விசாரணை நாளைக்கு (05.08.2021) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏரளாமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்