“தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நடந்த சோகம்”!... எதிர்பாராமல் மிளா உயிரிழந்த பரிதாபம்! நெஞ்சை நெகிழ வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி அருகே வனப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடிவந்த மிளாமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேகமலை சரணாலயத்தில் மிளா, யானை, காட்டெருமை போன்ற ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் தாங்காமல் விலங்குகள், வனப்பகுதியிலிருந்து இரை தேடி அடிவார பகுதிக்கு வந்து செல்கின்றன.

இதன் காரணமாக பல இடங்களில் மான்கள் குடிநீர் தேடி வரும்போது, நாய்கள் கடித்து உயிரிழப்பதும், கிணற்றில் விழுந்து உயிரிழப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு கப்பாமடை வனப்பகுதியில் இருந்து அருகே உள்ள தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக 1.5 வயது மதிக்கத்தக்க பெண் மிளாமான் ஒன்று வந்துள்ளது.

அப்போது அங்கு இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த மிளா, வெகு நேரமாக தண்ணீரில் தத்தளித்து உயிரிழந்தது. இதனையடுத்து, இன்று காலை தோட்டத்தில் உள்ளவர்கள் கிணற்றில் மான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் இறந்து கிடந்த மிளாவை மீட்டு, கூடலூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து உடற்கூறு பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.

THENI, DEER, DIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்