'பலரின் சொந்த வீடு கனவு'... 'சென்னையில் வீடு விற்பனை என்ன ஆச்சு'?... வெளியான ஆய்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா 2-ஆவது அலை பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

பிரபல வீட்டுவசதி தரகு நிறுவனமான 'புரோப்டைகர்' வீடு விற்பனை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 3 மாதங்களில் வீடுகள் விற்பனை 76 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் 66 ஆயிரத்து 176 வீடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு அதே 3 மாதத்தில் 15 ஆயிரத்து 968 வீடுகள் மட்டுமே விற்பனையானதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை வீடு விற்பனை 4 ஆயிரத்து 468 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பல துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்