'4' மணி நேரம்... ஃபிளாட்பார்ம் அருகே கிடந்த 'உடல்'... 'கொரோனா'வா இருக்கும்னு யாரும் கிட்ட போகல!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சாலையோரம் அருகே அடையாளம் தெரியாத வயதான நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

அதே வேளையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே அவரது உடல் கிடந்ததால் அவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அச்சத்தின் பெயரில் பொது மக்கள் யாரும் அவரின் அருகில் செல்ல முயற்சி செய்யவில்லை என தெரிகிறது.

சுமார் 4 மணி நேரம் நடைமேடையில் உடல் கிடந்த நிலையில் அதன் பின்னர் கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த மனிதரின் உடலை மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காத நிலையில் மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றனர். அவரின் மரணம் குறித்த காரணம் எதுவும் சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்