‘சொத்துக்காக மருமகளால்’... 'மாமியாருக்கு நடந்த சோகம்'... 'சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொத்துக்காக சொந்த மாமியாரை மருமகள் கடத்தி சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி (70). இவருக்கு செந்தில், ராஜு என 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்துவரும்நிலையில், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால், அயனாவரம் நாராயண மேஸ்திரி தெருவில் உள்ள தனது அக்காள் சரஸ்வதி வீட்டில், பத்மினி தங்கி இருந்தார். மேலும் பத்மினிக்கும், அவரது மருமகள் மேனகாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, அயனாவரத்துக்கு காரில் வந்த மருமகள் மேனகா, மாமியார் பத்மினியை காரில் கடத்திச் சென்றுள்ளார். அப்போது அவருடன் இளைஞர் ஒருவரும் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள், உடனடியாக அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீசார், பத்மினியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார். அப்போதுதான் மருமகள் மேனகா, மாமியார் பத்மினியை திருநின்றவூர் அருகே தனது உறவினர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணை செய்து வருவது தெரிந்ததும், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மாமியாரை கடத்தி அலைக்கழித்துவிட்டு, பின்னர் அயனாவரம் வீட்டுக்கே மாமியாரை கொண்டு வந்து விடும்போது, போலீசாரிடம் மாட்டிக் கொண்டார். இதையடுத்து, ரூ.4 கோடி சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றுவதற்காக, மாமியாரை கடத்தி சென்றதும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ராஜேஷ்கண்ணா என்ற இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேனகாவை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DAUGHTER, MOTHER, LAW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்