"அந்த நாலு பேரு யாருன்னு சொல்லும்மா, யாருன்னு தெரியணும்".. டான்சர் ரமேஷ் மறைவால் கதறிய தாயார்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் உயிரிழந்து போனது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலம் அடைந்து பிரபல தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராகவும் களமிறங்கி இருந்தார்.

தொடர்ந்து தனது நடன திறமையால் ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்தார் டான்சர் ரமேஷ். சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்தார்.

இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான நேற்று (27.01.2023) டான்சர் ரமேஷ் மறைந்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதற்கட்ட தகவல்களின் படி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டான்சர் ரமேஷின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், டான்சர் ரமேஷ் மறைவால் அவரது தாயார், முதல் மனைவி மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் என அனைவரும் கண்ணீர் விட்டு கதறியபடி இருந்தனர். அந்த சமயத்தில், ரமேஷின் தாயார், "அந்த நாலு பேரு யாருன்னு சொல்ல சொல்லு மா. அந்த நாலு பேர் யாரு. அது யாருன்னு தெரியணும்" என திரும்ப திரும்ப குறிப்பிட்டபடி கண்ணீர் விட்டு கொண்டே இருந்தார்.

முன்னதாக, ரமேஷ் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக கருத்துக்கள் பரவி வந்தாலும், அவரது தாயார் மற்றும் முதல் மனைவி உள்ளிட்ட பலரும் அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்றும் நிச்சயம் இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால், போலீசார் ரமேஷ் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், அதற்கு பின்னால் யாராவது இருந்தால் அது பற்றி தெரிய வரும் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கருதி வருகின்றனர். ரமேஷின் மரணம், அவரது ரசிகர்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

DANCER RAMESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்