‘ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? விலக்கா?’.. மருத்துவக் குழுவினருடன் 'தமிழக முதல்வர்' 29-ஆம் தேதி முக்கிய 'ஆலோசனை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளதுடன், நாளுக்கு நாள் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பதிவாகியே வருகின்றன. 

இதனிடையே ஆகஸ்டு மாதத்துக்கான ஊரடங்கு முடியப்போகும் சூழலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன், வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். 

சென்னை தலைமை செயலகத்தில் நிகழவிருக்கும் இக்கூட்டத்தில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய பின்னர், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு அல்லது விலகல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்