'சென்னை'க்கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னைக்கு சென்ற விவரங்களை மறைத்து வருகின்றனர். அதனால் இந்த வழிமுறையில் களமிறங்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. சென்னையில் கொரோனா அதிகரித்ததால் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் தற்போது தமிழக மாவட்டங்களில் கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சென்று வந்த விவரங்களை பொதுமக்கள் மறைப்பதால் கோவை மாநகராட்சி அதிகாரிகள் புதிய வழி ஒன்றை கையாள இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''தொற்று உறுதியான சிலர், இதற்கு முன்பு எங்கு சென்றார்கள்? குறிப்பாக சென்னை சென்றார்களா? என்பன போன்ற தகவலை தெரிவிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என்று கண்டறிய முடியாமல் போவதுடன், அவர்களோடு தொடர்பு இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

எனவே தகவல் தெரிவிக்காதவர்களிடம் விவரங்களை பெற அதாவது போலீஸ் பாணியை கையாள உள்ளோம். கொரோனா பாதித்தவரின் செல்போன் எண்ணை ‘டிராக்கிங்’ மூலம் கண்டறிந்தால் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள்? யார்-யாருடன் பேசினார்கள் என்ற விவரங்கள் தெரிந்து விடும். அப்படி செல்போன் 'டிராக்கிங்' மூலம் தகவல்களை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்