VIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. 

இங்கு பூசாரியான ஓம்பிரகாஷ் என்பவர் அக்கோவிலில் நேற்று பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அக்கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும், தி.மு.க கவுன்சிலர் பேபியின் கணவருமான லெனின் என்பவரும் அங்கு வந்து, ஓம்பிரகாஷை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

லெனினும், ஓம்பிரகாஷும் ஏற்கனவே கோவில் பணி முறைமாற்று பிரச்சனையில் கோவிலை மூடி, பூட்டு போட்டிருந்ததாகவும், இந்நிலையில் ஓம்பிரகாஷ் நேற்று கோவிலைத் திறந்து பூஜை செய்த நிலையில் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்