"வேற வழியே இல்ல... சென்னை மக்கள் இன்னும் 4 மாசத்துக்கு... இத கட்டாயம் செஞ்சே ஆகணும்”... - 'கொரோனா குறையாததால், மாநகராட்சி கமிஷனர் ஆணை!!!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இந்தாண்டு இறுதி வரை மாஸ்க் அணிவது கட்டாயம் என சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், வெளி மாவட்டங்களுக்குச் சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாஸ்க் மற்றும் தனி மனித இடைவெளி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் கொரோனா பரவலின் வேகம் குறையாமல் உள்ளதால், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு மாஸ்க் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்