'ஊரடங்கு தளர்வால்'... 'மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கும் அபாயம்'... 'மருத்துவ வல்லுநர்களுடன்'... 'முதலமைச்சர் 'முக்கிய' ஆலோசனை'...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ஆம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு தளர்வால் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுநர்களுடன் வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்