இதனால் தான் 'ட்விட்டரை' விட்டு விலகினேன்.. 'ஷாக்' அளித்த குஷ்பூ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பூ ட்விட்டரை விட்டு திடீரென விலகி இருக்கிறார். தொடர்ந்து ட்விட்டரில் மிகுந்த ஆக்டிவாக இருந்த குஷ்பூ திடீரென அதை விட்டு விலகியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் தனது செயலுக்கான காரணம் குறித்து குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். அதில், '' ட்விட்டரில் எதிர்மறையான விஷயங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் வழியாகத் தான் மக்களிடம் கருத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறேன், பத்திரிக்கையாளர்களிடம் அவ்வப்போது பேசுகிறேன்.

மக்களிடம் இதன் வழியாக என்னுடைய கருத்துக்களை சொல்ல முடியும். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எதிர்மறை கருத்துக்கள் அதிகம் இல்லை. தொடர்ந்து அதில் பயணிப்பேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்