“வசந்த் & கோ” உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ‘வசந்தகுமார்’ கொரோனாவால் காலமானார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காங்கிரஸ் எம்.பியும் வசந்த் & கோ உரிமையாளருமான வசந்தகுமார் கொரோனாவால் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியும் வசந்த் & கோ உரிமையாளரும்மான வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

முன்னதாக மிகவும் அவரது உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் அண்மையில் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. அவரது இறப்பை அனுசரிக்கும் விதமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கட்சிக்கொடி அரை கம்பத்தில் இறக்கி பறக்கவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்