என்ன அந்த 'பேய்' சாக கூப்புடுது... பிறந்தநாள் முடிந்த 2 நாளில்... 'விபரீத' முடிவெடுத்த கல்லூரி மாணவி... கடிதத்தை பார்த்து 'ஷாக்'கான பெற்றோர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் லத்திகா. கல்லூரி மாணவியான இவர் கொரோனா விடுமுறையை ஒட்டி வீட்டில் இருந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய லத்திகா அதற்குப்பின் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.  இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் லத்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

அதில், ''அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்துறாங்க. அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க. இதை சொன்னா எல்லாரையும் கொல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே தம்பி தங்கச்சி நீங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை ஃபேமிலி,'' என எழுதி வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்