‘திடீரென ரோட்டில் மயங்கி விழுந்த முதியவர்’.. ‘உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்’.. குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை உடனே தூக்கிச் சென்று ஆசுவாசப்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராத்து பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சென்றுகொண்டிருந்தார். குளித்தலை சுங்கச்சாவடி அருகே காரில் வந்துக்கொண்டிருந்தபோது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனே போக்குவரத்து காவலர் ஒருவர் உதவியுடன் அருகில் உள்ள டீக்கடைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னர் தண்ணிர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்குமாறு வட்டாச்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆணை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

COLLECTOR, KARUR, OLDMAN, HELPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்