கல்யாணம் ஆகி 2 நாள்தான் ஆகுது.. மறுவீட்டுக்கு போன புதுமாப்பிள்ளை.. இப்படி ஆகும்னு நெனக்கலயே.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் ஆன இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சவுடையன்-மஞ்சுளா தம்பதியின் மகன் ஷியாம் பிரசாத். இவர் கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுக்கும் கடந்த 14-ம் தேதி கோவையில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் மறுவீட்டு விருந்திற்காக ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி மற்றும் பெற்றோருடன் காரில் போடி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். காரை ஷியாம் பிரசாத் ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்களது கார் கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அந்த சமயம் எதிரே ஒரு பேருந்தை முந்திக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.

அப்போது முன்னால் வந்த ஷியாம் பிரசாத்தின் கார் மீது வேகமாக மோதியுள்ளது. இதனை அடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் காரில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். இதில் புதுமாப்பிள்ளை ஷாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சவுடையன், மஞ்சுளா மற்றும் ஷியாம் பிரசாத்தின் மனைவி சுவாதி ஆகியோரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்தார்.

தற்போது சுவாதி மற்றும் சவுடையன் ஆகிய இருவரும் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு சென்றபோது புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாயார் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, GROOM, COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்