‘மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொன்றுவிட்டு’.. ‘தாய் செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘கோவை அருகே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவருக்கு திவ்யதர்ஷினி மற்றும் பிரனேஷ்  என்ற 2 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌரியின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து போய் இருந்த கௌரி தனது 2 குழந்தைகளுக்கு தூக்கு மாட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரில் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

COIMBATORE, MOTHER, MURDER, DAUGHTER, SON, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்