'2 தடவ மிஸ்ஸிங்...' '3-வது தடவ மிஸ் ஆக சான்ஸே இல்ல...' 'போலீசாருக்கு கிடைத்த சின்ன க்ளூ...' - பைக் மூவிங்ல நடந்த வழிப்பறி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவஞானம்.

இவர், சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் அருகே சக்தி ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது, அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிவஞானம் மனைவியின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் நகையை பறித்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இருந்து மர்ம நபரில் ஒருவர் மட்டும் தவறி கீழே விழுந்தார். உடனே அவரை சிவஞானம் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் பைக்கில் தப்பி சென்றுவிட்டார்.

அவ்வழியாக வந்த போலீசாரும் கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனாலும், அவர்கள் ரெண்டாவது முறையாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவஞானம் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களைத் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

மேலும், வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், தப்பி சென்றவர்களின் பைக் ரெஜிஸ்டர் நம்பரைக் கொண்டு விசாரித்தனர்.

அப்போது பைக்கின் உரிமையாளர் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அன்புராஜ் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர், பைக்கை தனது அண்ணன் புவனேஸ்வரனிடம் (31) விற்றுவிட்டதாக கூறினார். இதனையடுத்து போலீசார், புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (23), ரபிக் (22), கொடைக்கானலைச் சேர்ந்த இப்ராஹிம் (25) ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்