'எனக்கு ஓகே, உனக்கு ஓகே வா'?... '66 வயது முதியவர் கடிதம் மூலம் போட்ட பிளான்'... ஆடிப்போன சிறுமியின் குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது பேத்தி வயதுடைய சிறுமியை வக்கிர கண்கொண்டு பார்த்ததோடு, காதல் கடிதம் எழுதிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா. 66 வயதாகும் இவரின் வீட்டின் அருகே, 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரோடு வசித்து வருகிறார். அந்த சிறுமி வெளியில் வரும்போதெல்லாம் முகமது பீர் பாஷா தவறான கண்ணோட்டத்தோடு பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது வக்கிர புத்தியைக் காட்டிய அந்த முதியவர், சிறுமிக்குக் காதல் கடிதம் எழுதியுள்ளார். அதில்  “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஒகே வா” என எழுதியிருந்தாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அந்த சிறுமி, அந்த கடிதத்தைக் கொண்டு அவரது பெற்றோரிடம் கொடுத்துள்ளார். சிறுமிக்குத் தாத்தா வயதில் இருக்கும் அந்த நபர் செய்த செயலை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரிடம் இத்தகவலைத் தெரிவித்து அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்த பாஷா, சிறுமி வெளியில் வந்த நேரம் பார்த்து அவரை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். மகளின் நிலையைப் பார்த்து வேதனை அடைந்த சிறுமியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் முதியவரைக் கைது செய்து அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெளியில் பெண் குழந்தைகள் ஏதேனும் பிரச்சனையைச் சந்திக்கும் பட்சத்தில், அவர்களது வீட்டில் வந்து தைரியமாக அதனைக் கூற வேண்டும். பெற்றோரும் அதைக் கனிவாகக் கேட்டு அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்