'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து...' - தமிழக முதல்வர் கூறிய பதில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் ஆ.ராசா கூறிய கருத்து குறித்து கேட்டபோது, ‘2ஜி வழக்கு முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ்- திமுக ஆட்சியில் இருந்த போது தான் 2-ஜி வழக்கில் ஆ.ராசா சிறைக்கு சென்றார். பாஜக ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்றால் அரசியல் என்று சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி தான் சிறையில் அடைத்தது’ என கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் அதற்கு பிறகு அதுகுறித்து பதில் தருகிறேன். இப்போதைக்கு அவர் கருத்தை தான் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும், வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்துடன் கூட்டணி அமையலாம் என ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து தான் என்றும் அது கட்சியுடைய கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்