BREAKING: 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 'ஆல் பாஸ்'!... தமிழக அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

கொரோனா அச்சுறுத்துலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதியாண்டுத் தேர்வின்றி ஆல் பாஸ் என அறிவிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திங்கட்கிழமை நடந்த 12ம் வகுப்பு தேர்வை எழுத இயலாதவர்களுக்கு, மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்