Video: 'தவ்ளூண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது...' 'எனக்கு பயம் இல்ல...' - பஸ் முன்னாடி மப்புல செய்த அட்ராசிட்டி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை குரோம்பேட்டையில் குடிபோதையில் ஓடும் பேருந்தை ஒற்றை கையில் நிறுத்த முயன்றவரின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகவே தமிழ் சினிமாக்களில் காட்டுவது போல ஆண்கள் குடித்துவிட்டால் யானை பலம் வரும் என்பதை உறுதிப்படுத்த துணிந்துள்ளார் குரோம்பேட்டையில் வசிக்கும் ஒரு மதுபிரியர்.

சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மது அருந்திய நபர் ஒருவர் போதையில் கண்முன் தெரியாமல் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் சாலையின் நடுவே நடந்து சென்று அவர் பிராட்வே நோக்கி சென்ற மாநகர பேருந்தை திடீரென தன்  இரண்டு கைகளால் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த குறளிவித்தையை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்த சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த மது பிரியர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்