உயிருக்கு போராடிய 'தம்பியை' காப்பாற்ற... 10 வயது 'சிறுமி' செய்த காரியம்... கடைசி வரை 'போராடிய' மருத்துவர்கள்... நெஞ்சை ரணமாக்கிய சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உயிருக்கு போராடிய தம்பியை காப்பாற்ற, முயற்சி செய்த சிறுமியும் நீருக்குள் மூழ்கி விட்டார்.

Advertising
Advertising

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் குமார். இவரின் மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு பிருந்தா(10) கிரிதரன்(8) என்று 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று இருவரும் வீட்டுக்கு அருகில் உள்ள கோயில் வளாகத்தில் விளையாடி இருக்கின்றனர். அப்போது அருகில் உள்ள குளத்துக்கு இருவரும் குளிக்க சென்றுள்ளனர்.

குளிக்கும்போது கிரிதரன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். தம்பி உயிருக்கு போராடுவதை பார்த்த பிருந்தா தம்பியை காப்பாற்ற முயன்று, கடைசியில் இருவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடி இருக்கின்றனர். இதை அப்பகுதி வழியே வந்த அரசு பேருந்து டிரைவர் பார்த்து விட்டு பேருந்தை நிறுத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இதில் அக்கம், பக்கத்தினர் அனைவரும் திரண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு யாரும் இல்லை. தொடர்ந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தைகள் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்