'அப்பா உன்ன குளிக்க வைக்குறேன்'...'திடீரென வந்த போன் கால்'... குலை நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒன்றரை வயது குழந்தை வாளியில் மூழ்கி இறந்த சம்பவம் பலரது நெஞ்சையும் பதைபதைக்க செய்துள்ளது. இதற்கு கவனக்குறைவே காரணம் என கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் அருண் என மகன் இருக்கிறான். வழக்கமாக முருகன் தனது மகனை குளிப்பாட்டுவது வழக்கம். அப்போது மகன் அருணை வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம். அதே போன்று நேற்று மகனை குளிப்படுவதற்காக வாளியை முருகன் நிரப்பினார். மகன் அருணும் வாளிக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

இதனிடையே வாளி நிரப்பிய நிலையில், முருகனுக்கு செல்போனில் அழைப்பு வர அவர் சென்று விட்டார். அந்த நேரத்தில் நீர் நிரப்பிய வாளியில், முருகனின் ஒன்றரை வயது மகன் அருண் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளான். இந்நிலையில் முருகன் குழந்தையை அழைக்க, அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஓடி சென்று பார்த்துள்ளார். அப்போது உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை நீரில் மூழ்கிய நேரத்தில் முருகனின் மனைவி சமையலறையில் இருந்துள்ளார். இதனால் அவரும் குழந்தையை கவனிக்க தவறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, DROWNED, CHILD, TIRUVALLUR, BATHING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்