கொரோனாவை வென்ற 'செய்யூர்' தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் 'ஆர்.டி.அரசு'!.. மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம்  செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு. சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னையில் உள்ள MIOT மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஆர்.டி. அரசு அவர்கள் கோவிட்-19 சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து 14.07.2020 அன்று வீடு திரும்பினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்