லிஃப்ட்டில் தனியாக வந்த பெண்.. திடீரென அருகே நின்ற இளைஞர் செய்த பதைபதைப்பு காரியம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : லிஃப்ட்டில் தனியாக நின்ற பெண்ணிடம், அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞரால், கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

நாடு முழுவதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை.

டோர் டெலிவரி

இந்நிலையில், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னையின் புரசைவாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் வாழும் குடும்பங்களின் வசதிக்காக, அருகிலுள்ள கடைகளில் வாங்கும் பொருட்களை அங்கு வேலை பார்ப்பவர்கள், டோர் டெலிவரி செய்வது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது.

லிஃப்ட்டில் பயணம்

அப்படி அந்த அபார்ட்மெண்ட் அருகேயுள்ள காய்கறி கடையில் இருந்து வந்த இளைஞர், காய்கறிகளை டெலிவரி செய்வதற்காக வந்துள்ளார். சுமார் 24 வயதான அந்த இளைஞர், 6 ஆவது மாடியில் காய்கறி டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிலையில், லிஃப்ட்டிலும் அவர் எறியுள்ளார். அப்போது, அதே அபார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வரும் பெண் ஒருவரும், இளைஞருடன் லிஃப்ட்டில் ஏறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெண்

இதனால், இருவரும் லிஃப்ட்டில் தனியாக பயணம் செய்த நிலையில், திடீரென அந்த இளைஞர், ஆடைகளை எல்லாம் கழற்றி விட்டு, அந்த பெண்ணிடம் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்து போன பெண், கத்திக் கூச்சல் போட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த வீட்டு உரிமையாளர்கள், இளைஞரின் பேரில் புகாராளித்தனர். தொடர்ந்து, இளைஞரரைக் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

லிஃப்ட்டில் பயணம் செய்யும் சில நிமிடங்களுக்குள், தனியாக நின்ற பெண்ணிடம், இளைஞர் செய்ய முயன்ற செயல், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, APARTMENT, LIFT, YOUTH, சென்னை, அபார்ட்மெண்ட், இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்