'திருடன் எங்க சென்னை வீட்டுக்குள்ள நுழையுறான் சார்...' 'அயர்லாந்தில் இருந்து வந்த அலெர்ட்...' - வீட்டுக்குள்ள காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாட்டில் இருக்கும் சென்னை இளைஞர் ஒருவர் சிசிடிவி கேமிரா மூலம் தன் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை போலீசாரிடம் மாட்டிவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயிலை சேர்ந்த அருள் முருகன் என்னும் இளைஞர் ஒருவர் பணிக் காரணமாக அயர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். மேலும் அருள் முருகனின் தாயார் சண்முக சுந்தரவள்ளி, அண்ணா நகரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை கவனித்த அப்பகுதி திருடன், அருள் முருகனின் வீட்டில் சிசிடிவி கேமிராவை கவனிக்காமல் வீட்டிற்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அயர்லாந்தில் இருந்து தன் சென்னை வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அருள் முருகன், கொள்ளையடிக்க சென்ற திருடனை குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்று, திருடனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் போலீசாரிடம் மாட்டிய கொள்ளையன் எப்போதும் அந்த வீட்டிற்கு தான் செல்லும்போதெல்லாம், போலீசாரிடம் சிக்கிக் கொள்வதாக, திருடன் சைக்கோ முரளி புலம்பியுள்ளார்.

மற்ற செய்திகள்