'சென்னையில் இரவில் வரும் கொள்ளையன்!'.. 'திருடும் முறையே இப்படித்தான்'.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அம்பத்தூரில் 10 வயது சிறுவனை ஈடுபடுத்தி வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையனை கண்காணிப்பு கேமரா கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர் கச்சனா குப்பத்துல் வீடுகளில் கேஸ் சிலிண்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை களவு போவதாக தொடர் புகார்கள் வந்திருந்த நிலையில், பரிமளா என்பவரின் வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்பேசிகள் காணாமல் போயுள்ளன.

இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர், 10 வயது சிறுவனை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அனுப்பி கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுத்தும் காட்சி பதிவாகியிருந்ததை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்