சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ‘பாதி வழியில்’ ரத்து.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் பாதி வழியுடன் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்றும், நாளையும், காலை 9:32 மணி, 10:08 மணி, 10:56 மணி, 11:48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 30ம் தேதி (நாளை) நண்பகல் 12:15 மணிக்கு தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு, இன்றும், நாளையும் காலை 11:30 மணி, நண்பகல் 12:20 மணி, மதியம் 1:00 மணி மற்றும் 1:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு, காலை 10:55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்